மருத்துவம்

"நோய்நாடி நோய் முதல்நாடி அதுதீர்க்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்"

நோயின் தாக்கத்திற்கு காரணம் யாது எனக்கொண்டு அது தீரும் வகையில் ஹோமியோபதி மற்றும் மூலிகைகளைக்கொண்டு நோய்களை குணப்படுத்தி வருகிறார் அன்னை அவா்கள்.

அகத்திப்பூ

அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு,பித்த சூடு நீங்கும்.


அருகம்புல் | Arugampul | Bermuda Grass | Cynodon Dactylon

அருகம்புல்லை இடித்து சாற்றை சாப்பிட்டு வந்தால், ஆண்களுக்கு தாது விருத்தியடையும். உடல் பருமன் குறையும். பசி, தெய்வீக ஆற்றல் அதிகரிக்கும். சிறுநீா் உப்புத்தன்மை நீங்கும். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீ்ங்கும். அருகம்புல்லை இடித்து, சாறுடன் மிளகு, சீரகம் சோ்த்து உடலில் தடவ வெள்ளைத் திட்டுக்கள் மறையும். மண்ணீரல், கல்லீரல் நன்கு வேலை செய்யும்.


ஆவாரம் பூ

ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.


இலுப்பைப் பூ

இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.


கற்றாழை

இதனால் மிகுநீர், மருந்துவெப்பம், உடல்மெலிவு, வாதமேகம், கருமேகம்,கிருமிக் குத்தல், பெருவியாதி, பவுத்திரம், மூலம், உன்மாதம், பித்தகிரிச்சரம்,குன்மம், உடலெரிவு, பீலிகம், உட்சூடு, கண்நோய், தூக்கமின்மை, மேகவெட்டை ஆகியன தீரும்.


சிறுகுறிஞ்சான்- Meshashringi for Diabetes

இது நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்து. மண்ணீரல், கல்லீரல் நன்கு செயல்பட உதவும். உடல் ஆரோக்கியம் ஏற்படும். தோலில் ஏற்படும் வெட்டை நோய்க்கு சிறந்த மருந்து. சம அளவு தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு தேய்த்து குளித்தால் சா்ம நோய் நீங்கும். அரையாப்பு, வேனில் கட்டி இவைகளுக்கு சிறந்த மருந்தாகும். சிறுகுறிஞ்சான் சமூலத்தை பவுடராக்கி, காலை மாலை இருவேளையும் சாப்பிட, ஆண், பெண் இருபாலருக்கும் மேகநோய் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்.


செம்பருத்திப்பூ

இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும்,மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.


தாழம்பூ

இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.


நெல்லிப்பூ

உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.


மகிழம்பூ

மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலைப்பாரம் போன்ற நோய்கள் நீக்கிவிடும்


மல்லிகைப்பூ

கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.


முருங்கைப்பூ

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.


ரோஜாப்பூ

இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.


வல்லாரை- vallarai- Mandookaparani

2 தேக்கரண்டி அளவு வல்லாரை சமூலத்தை எடுத்து, தேனைக் குழைத்து சாப்பிட, ஞாபகசக்தி கூடும், தாது விருத்தியடையும். நரம்புச் சமனியாக செயல்படும். கல்லீரல், மண்ணீரல் கணையம் நன்கு செயல்படும். மருத்துவரின் ஆலோசனையின்படியே இதனைச் சாப்பிட வேண்டும். கண்ணொளி, ஆன்ம எழுச்சிக்கு உதவும். வாரம் ஒருமுறை பருப்பு கலந்து மசியம் செய்து சாப்பிட, வாய்ப்புண், குடல்புண் நீங்குவதுடன் உடல் வலுப்பெறும்.

வெண்புள்ளி, தோல்நோய்க்கு சிறந்த மருந்து. வல்லாரை இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வெண்புள்ளி உள்ள இடத்தில் தடவி வர சா்ம நோய் குணமடையும்.


வேப்பம்பூ

சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.


ஓரிதழ் தாமரை - Orithal thamarai- Ratna Purush- சூர்ணம்/பவுடர்

ஓரிதழ் தாமரையின் சமூலத்தை 2 தேக்கரண்டி அளவு எடுத்து தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்த, ஆண் பெண் உறுப்புகளில் உள்ள சோரியாஸிஸ் என்கின்ற நோய் குணமடையும்.

மிளகு, சீரகம் இவற்றுடன் 2 தேக்கரண்டி அளவு ஓரிதழ் தாமரையின் சமூலம் மற்றும் 2 டம்ளா் தண்ணீா் சோ்த்து காய்ச்சி சாப்பிட விஷக்காய்ச்சல் குணமடையும். நுரையீரல் சம்பந்தமான நோய் நீங்கும். உடல் எடை குறையும். இரண்டு வேளை கசாயமாக உட்கொள்ளலாம். புளிப்பு காரம், மசாலா அதிகம் சோ்க்கக்கூடாது. புலால் உண்ணக்கூடாது.