திருப்பாவை பாடல் 1

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

     நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

     கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

     கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

     பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய்.